அமெரிக்காவின் ஏவுகணை தாக்குதலில் நால்வர் பலி!

Sunday, February 11th, 2018

ஆப்கானிஸ்தான் மற்றும் பாக்கிஸ்தான் எல்லை பகுதியில் அமெரிக்காவினால் மேற்கொள்ளப்பட்ட ஏவுகணை தாக்குதலில் சிரேஷ்ட பாக்கிஸ்தானிய தாலிபான் பிரதி தலைவர் உட்பட நால்வர்  பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு ஏவுகணை தாக்குதலிலேயே இவர்கள் பலியானதை பாக்கிஸ்தானிய புலனாய்வுப் பிரிவினரும் தாலிபான் தளபதிகளும் இந்த சம்பவத்தை உறுதிப்படுத்தியுள்ளனர்.

எப்படியிருப்பினும், ஆப்கானிஸ்தான் துருப்பினருடன் இணைந்து செயல்படும் நேற்றோ படைத்தளபதி ஒருவர் தமது பெயரை குறிப்பிடாத நிலையில், இந்த தாக்குதல் தொடர்பான தகவல்கள் தமக்கு கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளார்

பலியான பாக்கிஸ்தானில் நிலைகொண்டுள்ள தாலிபான் பிரதி தலைவர், ஆப்கானிஸ்தான் தாலிபான்களுடன் நெருங்கிய தொடர்பினை கொண்டவர் என குறிப்பிடப்பட்டுள்ளது

இதேவேளை, பாக்கிஸ்தானின் எல்லையில் உள்ள வட வசிரிஸ்தானிலும் பிறிதொரு ஏவுகணை தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என தாலிபான் தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர்.

அதேவேளை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பதவி ஏற்றதன் பின்னர் பாக்கிஸ்தான் எல்லை பிராந்தியங்களில் ஏவுகணை தாக்குதல் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: