அண்ணனின் கையெழுத்தால் மாறிய தங்கையின் தலையெழுத்து!

Thursday, July 6th, 2017

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் தலைநகரான லாகூரில் உள்ள ஷலிமர் பகுதியில், கையெழுத்து சரியில்லை என கூறி கேலி செய்த தங்கையை சொந்த அண்ணனே கொடூரமாக கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஷலிமர் பகுதியில் அப்துல் ரகுமான் என்ற 11 வயது சிறுவனும், அவனது தங்கை 9 வயதான ஈமன் தன்வீர் ஆகிய இருவரும் பாட்டி வீட்டில் வசித்து வந்துள்ளனர்.பாட்டி வெளியில் சென்றிருந்த போது, அப்துல் ரகுமானும் ஈமன் தன்வீரும் யாருடைய கையெழுத்து அழகாக உள்ளது என்பதை காண தங்களுக்குள் போட்டி வைத்துள்ளனர். இதில் அப்துல் ரகுமானின் எழுத்து மோசமாக இருந்ததை பார்த்து தங்கையான ஈமன் தன்வீர், கேலி செய்துள்ளார்.இதனால்,ஆத்திரம் அடைந்த அப்துல் ரகுமான் துப்பட்டாவால் தங்கையை கொலை செய்தார். கொலையை மறைப்பதற்காக தனது கையில் வெட்டிக்கொண்டு அறையை பூட்டிக்கொண்டு ரகுமான் இருந்துள்ளார்.வெளியில் சென்று இருந்த பாட்டி வீடு திரும்பியதும், வீடு பூட்டி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.  அண்டை வீட்டினர் உதவியுடன் வீட்டை திறந்த பார்த்த போது, பேத்தி கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரிந்தது.இந்த சம்பவம் பற்றி விசாரணை நடத்திய பொலிஸார் அப்துல் ரகுமானை கைது செய்தனர்.விசாரணையில், இந்திய தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சிஐடி சீரியலை பார்த்து எப்படி கொலை செய்வது என்று தெரிந்து கொண்டதாகவும் , அதை பின்பற்றியே கொலையை அரங்கேற்றியதாகவும் அப்துல் ரகுமான் கூறினான்

Related posts: