T – 20 உலகக்கிண்ண தொடரில் அற்புதங்களை நிகழ்த்துவோம் – மேத்யூஸ்
Friday, March 18th, 2016எங்கள் அணியால் எதை வேண்டுமானாலும் சாதிக்க முடியும் என்று ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றபின்னர் கருத்துத் தெரிவித்த இலங்கை அணித்தலைவர் மேத்யூஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேத்யூஸ் தெரிவிக்கையில் –
இந்த வெற்றி முக்கியமான ஒன்று. சமீபத்தில் நடந்த சில போட்டிகளில் நாங்கள் சிறப்பாக செயல்படவில்லை. இந்தப் போட்டியில் பந்துவீச்சாளர்கள் நன்றாக செயல்பட்டனர். அதேபோல் ஆப்கானிஸ்தான் துடுப்பாட்ட வீரர்கள் சிறப்பாக ஆடி ஓட்டங்கள் சேர்த்தனர்.
நாங்கள் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் கண்டிப்பாக அற்புதங்களை நிகழ்த்த முடியும் என்று கூறியுள்ளார்
Related posts:
மெய்வல்லுனர் போட்டிகளில் இருந்து மஞ்சுல குமார ஓய்வு!
திசார பெரேரவின் கனவு நனவானது : சொந்த மண்ணில் இலங்கையிடம் மண்டியிட்டது இந்தியா!
இலங்கையில் இரண்டு விளையாட்டு வீரர்களுக்கு கொரோனா தொற்று!
|
|