IPL போட்டி ஆரம்பம்!

Wednesday, April 5th, 2017

இந்திய பிறீமியர் லீக் கிரிக்கட் போட்டி 2017 இன்று ஆரம்பமாகவுள்ளது.10வது முறையாக இந்த IPL போட்டி நடைபெறவுள்ளது. இதில் 8 நாடுகள் பங்குபற்றுகின்றன.

ஒரு நாடு ஆரம்பசுற்றில் 14 போட்டிகளில் கலந்துகொள்ளும். இன்று போட்டி ஆரம்பிப்பதில் IPL போட்டியில் இறுதியாக கிண்ணத்தை கைப்பற்றிய ஹைதராபாத் மற்றும் றோயல் சலஞ்சஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன.

இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி இம்முறை 3 வீரர்கள் போட்டியில் கலந்துகொண்டுள்ளனர். இம்முறை ஆகக்கூடிய ஏல பெறமதியை அஞ்சலோ மத்தியூஸ் பெற்றுள்ளார். இவர் டெல்லி டெவீலியஸ் அணியை பிரதிநிதித்துவப்படுத்துகின்றார்.

மும்பாய் அணியை லசித் மாலிங்க மற்றும் அசேல் குணரத்ன பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். உலகிலேயே ஆகக்கூடுதலான பணம் கையாளப்படும் போட்டியாக IPL போட்டி கருதப்படுகின்றது. இந்த போட்டித்தொடர் எதிர்வரும் மேமாதம் 21ம் திகதியுடன் நிறைவடைகின்றது.

Related posts: