சண்டிலிப்பாய் இந்து கிண்ணம் வென்றது!

Wednesday, June 27th, 2018

வடமாகாண கல்வித் திணைக்களம் நடத்திய வடமாகாணப் பாடசாலைகளுக்கு இடையிலான 20 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான வலைப்பந்தாட்டத்தில் சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி அணி சம்பியனானது.

தெல்லிப்பழை யூனியன் கல்லூரி மைதானத்தில் நேற்று நடைபெற்ற இறுதியாட்டத்தில் சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி அணியை எதிர்த்து சுழிபுரம் விக்டோரியாக் கல்லூரி அணி மோதியது.

முதல் பாதியாட்டத்தில் சுழிபுரம் விக்டோரியாக் கல்லூரி அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியது .அந்த அணி 21:15 என்ற புள்ளிகளின் அடிப்படையில் முதல் பாதியில் முன்னிலை வகித்தது.

சரிவில் இருந்து மீண்டு இரண்டாம் பாதியில் மிகப் பெரும் போராட்டத்தை வெளிப்படுத்திய சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி அணி முடிவில் 34:32 என்ற புள்ளிகளின் அடிப்படையில் வெற்றிபெற்று கிண்ணம் வென்றது.

மூன்றாமிடத்தை பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலை அணி பெற்றது. சிறந்த வலைப்பந்தாட்ட வீராங்கனையாக சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரியை பிரதிநிதித்துவம் செய்த என்.தனுஜா தெரிவு செய்யப்பட்டார்

Related posts: