2025 ஆசியக்கிண்ண கிரிக்கெட் போட்டி இந்தியாவில்!
Tuesday, July 30th, 2024
2025 இல் ஆசியக்கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டி இந்தியாவில் நடைபெறவுள்ளது. இந்தப்போட்டிகள் 20க்கு 20 வடிவில் நடத்தப்படவுள்ளன. எனினும் 2027ஆம் ஆண்டு பங்களாதேஸில் நடைபெறும் போட்டிகள் ஒருநாள் வடிவில் நடத்தப்படவுள்ளன.
2025 இல் ஆசியக்கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டியில், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை,பங்களாதேஸ்; மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய ஆறு அணிகளுடன் 13 போட்டிகள் நடத்தப்படவுள்ளன.
அத்துடன் தகுதிச் சுற்றில் இருந்து வெளிவரும் ஆறாவது அணியும் இந்த போட்டிகளில் பங்கேற்கும்.
இந்தநிலையில் போட்டிக்கான உரிய திகதி இன்னும் இறுதிச் செய்யப்படவில்லை பெரும்பாலும் மழைக்காலம் முடிந்தவுடன் போட்டிகள் செப்டம்பர் மாதம் திட்டமிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
இருப்பினும், போட்டி நடைபெறும் இடங்கள் குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை இன்னும் முடிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|
|


