அணி அகில இலங்கை ரீதியில் 2 ஆவது சுற்றுக்கு முன்னேறியது மூளாய் விக்டோறி விளையாட்டுக் கழகம்!

Thursday, August 23rd, 2018

ஒவ்வொருவரும் ஒவ்வொரு சாதனையை அல்லது அவர்களது இலக்கை எட்டுவதற்கு எதிர்கொள்ளும் வசால்களும் சோதனைகளும் சொல்லில் அடங்காது. அவற்றை தாண்டியும் சாதனை படைத்த ஒவ்வொரு சாதனைகளுக்கும்  வரலாற்றுில் பதிவுண்டு.

அந்த வகையில் தான்

சிறிலங்கா கிரிக்கெட் பிரிவு 111 தொடருக்கான அரை இறுதிப் போட்டி கடந்த 18 ஆம் திகதி சனிக்கிழமையன்று யாழ்ப்பாணக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற போது மூளாய் விக்டோறி அணி யாழ்.ஜொனியன்ஸ் அணியை 12 ஓட்டங்களால் வெற்றி பெற்று அகில இலங்கை ரீதியில் 2 ஆவது சுற்றுக்கும் யாழ்.மாவட்டத்தில் இறுதிப் போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளது.

முதலில் துடுப்பெடுத்தாடிய விக்டோறி அணி 39.4 ஓவர்களில் சகல இலக்குகளையும் இழந்து 173 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் சரத்குமார் – 47, இன்பராசா- 20, சஜீதரன் – 18, பிரசாந் – 16, பிரசாத் – 10 ஓட்டங்களைப் பெற்றனர். பந்து வீச்சில் பிரிந்தாபன் – 3, டினேஸ் – 3, அபிநாத் – 2, லவேந்திரா – 2 இலக்குகளை கைப்பற்றினர்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய யாழ்.ஜொனியன்ஸ் அணி 35 ஓவர்களில் சகல இலக்குகளையும் இழந்து 161 ஓட்டங்களைப் பெற்றனர். துடுப்பாட்டத்தில் அபிநாத் – 38, பிருந்தாபன் – 31, அன்புஜன் – 18, சௌமிகன் – 16, தேவப்பிரசாத் – 16 ஓட்டங்களைப் பெற்றனர். பந்து வீச்சில் பிரதீஸ் – 6, கரியோன் – 3 இலக்குகளை கைப்பற்றினர். இப்போட்டியின் மூலம் யாழ்.சென்றல் விளையாட்டுக் கழகம் நடத்தும் தரவரிசை பட்டியலுக்கு விக்டோறி அணி 7.85 புள்ளிகளையும் யாழ்.ஜொனியன்ஸ் அணி 2.61 புள்ளிகளையும் பெற்றுக்கொண்டனர்.

Related posts: