ஹபீஸுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்!
Saturday, February 15th, 2020பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான மொஹமட் ஹபீஸுக்கு சர்வதேச போட்டிகளில் பந்துவீச விதிக்கப்பட்ட தடையை நீக்குவதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.
மொஹமட் ஹபீஸ் பந்தை வீசி எறிகிறார் எனும் சந்தேகத்தை கடந்த வருடத்தில் நடுவர்கள் வெளிப்படுத்தினர். அவர் பந்துவீசும் போது மணிக்கட்டு 15 பாகைக்கு மேல் வளைவதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.
எவ்வாறாயினும், இது தொடர்பாக இங்கிலாந்தின் லோபோரோ பல்கலைக்கழகம் பரிசோதனைகளை மேற்கொண்டதுடன், இதன்போது ஹபீஸின் பந்துவீச்சு பாணியில் தவறில்லை என கணிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, மொஹமட் ஹபீஸ் பந்துவீச விதிக்கப்பட்ட தடையை நீக்குவதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.
Related posts:
2வது சுற்றுக்கு ரோஜர் பெடரர் முன்னேற்றம்!
வரலாற்று சாதனை படைத்த யாழ். இளைஞர்கள்!
இங்கிலாந்தில் பார்வையாளர் இன்றி நடைபெறும் உள்ளூர் லீக் காற்பந்து போட்டிகள்!
|
|