இந்திய வீராங்கனை பிரியங்காவுக்கு 8 வருட தடை!
Wednesday, September 13th, 2017
ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கிய இந்திய தடகள வீராங்கனை பிரியங்காவுக்கு 8 ஆண்டுகள் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்திய தடகள வீராங்கனை 29 வயதான பிரியங்கா பன்வார், 2014 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டில் 4 x 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தங்கப்பதக்கம் வென்றார்.
கடந்த ஆண்டு இவர் 2 ஆவது முறையாக ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கினார், இதையடுத்து தேசிய ஊக்கமருந்து தடுப்பு கழகத்தின் ஒழுங்கு நடவடிக்கை கமிட்டி விசாரணை நடத்தி நேற்று (11) முடிவை அறிவித்தது.
இதன்படி பிரியங்காவிற்கு 8 ஆண்டுகள் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது, 2016 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் இருந்து தடை காலம் கணக்கிடப்படும். இதன் மூலம் அவரது விளையாட்டு வாழ்க்கை முடிவுக்கு வருகிறது.
Related posts:
யூரோ கிண்ணம்: காலிறுதிக்கு முன்னேறிய போலந்து!
திறமைக்கு கிடைத்த வெற்றி - மோர்கன்!
லடாக் தாக்குதலின் எதிரொலி : IPL அனுசரணை ஒப்பந்தங்களை மீளாய்வு செய்யும் நிர்வாகம்!
|
|
|


