இந்திய வீராங்கனை பிரியங்காவுக்கு 8 வருட தடை!
Wednesday, September 13th, 2017ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கிய இந்திய தடகள வீராங்கனை பிரியங்காவுக்கு 8 ஆண்டுகள் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்திய தடகள வீராங்கனை 29 வயதான பிரியங்கா பன்வார், 2014 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டில் 4 x 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தங்கப்பதக்கம் வென்றார்.
கடந்த ஆண்டு இவர் 2 ஆவது முறையாக ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கினார், இதையடுத்து தேசிய ஊக்கமருந்து தடுப்பு கழகத்தின் ஒழுங்கு நடவடிக்கை கமிட்டி விசாரணை நடத்தி நேற்று (11) முடிவை அறிவித்தது.
இதன்படி பிரியங்காவிற்கு 8 ஆண்டுகள் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது, 2016 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் இருந்து தடை காலம் கணக்கிடப்படும். இதன் மூலம் அவரது விளையாட்டு வாழ்க்கை முடிவுக்கு வருகிறது.
Related posts:
வங்கத்ததைப்போல் இலங்கைக்கும் பயிற்சி - ஹத்துருசிங்க!
வடக்கின் போர் எதிர்வரும் 7 ஆம் திகதி ஆரம்பம்!
இறுதி போட்டிக்கு தகுதிபெற்றது இந்தியா பெண்கள் அணி!
|
|