பிரபஞ்ச நாயகன் கிறிஸ் கெய்ல் – பாராட்டிய சேவாக்!
Monday, March 4th, 2019இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில், கிறிஸ் கெய்ல் அதிரடியாக 77 ஓட்டங்கள் குவித்ததை முன்னாள் இந்திய வீரர் சேவாக் வெகுவாக பாராட்டியுள்ளார்.
செயிண்ட் லூசியாவில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 5வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
அந்த அணியின் தொடக்க வீரர் கிறிஸ் கெய்ல் அதிரடியில் மிரட்டினார். 19 பந்துகளில் அரைசதம் கடந்த அவர், 27 பந்துகளில் 77 ஓட்டங்கள் குவித்தார். இதில் 9 சிக்சர்கள், 5 பவுண்டரிகள் அடங்கும்.
இந்நிலையில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான விரேந்தர் சேவாக் தனது ட்விட்டர் பக்கத்தில் வெகுவாக பாராட்டியுள்ளார். அதில் அவர் கூறுகையில்,
‘27 பந்துகளில் 77 ஓட்டங்கள் விளாசிய பெரிய வீரர், பிரபஞ்ச நாயகனாக இருப்பதற்கு காரணம் இதுதான்.
Related posts:
இறுதிப் போட்டியில் இலங்கை அணி பல மாற்றங்களுடன் களமிறங்கும்!
இலங்கை அணி தோல்வி சிம்பாப்வே வெற்றி!
உசைன் போல்ட்டுக்குக் கொரோனா?
|
|