வோர்னிற்கு மாற்றீடாக சங்கா!

Wednesday, April 18th, 2018

இலங்கை அணியின் முன்னாள் ஜாம்பவனான குமார் சங்கக்கார மீண்டும் நேர்முக வர்ணனையாளராக இங்கிலாந்தில் இடம்பெறவுள்ள முக்கியமான கிரிக்கெட் தொடரில் கலந்துகொள்ளவுள்ளார். இங்கிலாந்தில் இடம்பெறவுள்ள பாகிஸ்தானுக்கு எதிரான மற்றும் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்கள், அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் சர்வதேசத் தொடர் ஆகியவற்றில் ஸ்கை ஸ்போர்ட்ஸ் ஒளிபரப்பில் நேர்முக வர்ணனையாளரில் ஒருவராக இணைப்பதற்கான முயற்சிகள் நடைபெறுகின்றன.

அவுஸ்திரேலியாவின்  ஷேன் வோர்னுக்குப் பதிலாகவே சங்கா இணையவுள்ளார்.  இதன் முன்னரும் சங்கா இங்கிலாந்தில் 2017இல் இடம்பெற்ற சம்பியன்ஸ் கிண்ணத் தொடரின்போது நேர்முக வர்ணனையாளராக செய்ற்பட்டிருந்தார். சங்கக்காரவுடன் முன்னாள் பிரபல வீரர்கள் இயன் பொத்தம், மைக்கேல் ஹோல்டிங், ரிக்கி பொன்டிங், நாசர் ஹுசேய்ன், மைக் அர்த்தர்ட்டன், வசீம் அக்ரம், கவர், ஹர்பஜன் சிங் ஆகியோரும் இந்த குழுவில் உள்ளடங்குவர்.

இதே காலகட்டத்தில் நடைபெறவுள்ள லங்கன் பிரீமியர் லீக்கின் அறிமுகத் தொடரில் சங்காவினால் விளையாட முடியாமல் போகலாம். ஸ்ரீலங்கா கிரிக்கெட் தகவல்களின் அடிப்படையில் சங்கக்கார முன்னதாக LPL இல் ஒரு அணியைத் தலைமை தாங்க ஒப்புக்கொண்டு இருந்தார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் செய்தி வெளியுட்டுள்ளன.

இலங்கை கிரிக்கட்டுக்காக சங்கா, செயற்படுவாரா என்ற எதிர்பார்ப்பு வலுத்துள்ளது.

Related posts: