ஓய்வறைக் கண்ணாடியை உடைத்தது அணித்தலைவர் ஷகிப் உல்ஹசன் !

Friday, March 23rd, 2018

இலங்கை பங்களாதேஷ் போட்டியின் போது வீரர்கள் ஓய்வறை கண்ணாடியை  உடைத்தது பங்களாதேஷ் அணித்தலைவர் ஷகிப் உல்ஹசன் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையில் நடந்து முடிந்த முதல்தரப்பு ரி-20 தொடரின் முக்கிய ஆட்டத்தில் இலங்கை ௲ பங்களாதேஷ் அணிகள் மேதின இப் போட்டியல் கடைசி நேரத்தில் வீசப்பட்ட நோபால்கள் பெரும் சர்ச்சையை கிளப்பியது இதன் காரனமாக மைதானத்துக்குள் இரு அணி வீரர்களிடையே மோதல் உருவாகும் சூழல் உண்டானது. அதே சமயத்தில் பங்களாதேஷ் அணித்தலைவர் ஷகிப் உல்ஷசன் தனது அணி வீரர்களை வந்துவிடுமாறு ஆக்ரோசத்துடன் கோபமாக கத்தினார். அந்த சமயத்தில் பங்களாதேஷ அணி வீரர்களின் ஓய்வறை கதவு கண்ணாடி சுக்குநூறாக உடைக்கப்பட்டது.

இதை செய்தது யார் என தெரியாத நிலையில் அங்குள்ள சி.சி.டி.வி காட்சிகளை வைத்து ஆய்வு செய்ய நடுவர்கள் முடிவெடுத்தனர் ஆனால் சி.சி.டி.வி காட்சிகள் குறித்து விளக்கம் இன்னும் தரப்படவில்லை ஆனால் அந்த அறையில் அருந்த சமயல்காரர்கள் ஷகிப் உல்ஹசன் தான் கண்ணாடியை உடைத்தார் என நடுவர் கிறிஸ் பிராடிடம் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஷகிப் கண்ணாடி கதவை வேகமாக தள்ளியதை பார்த்தாகவும் அவர்கள் கூறியுள்ளனர் ஏற்கனவே ஷகிப் நடந்து கொண்ட விதத்துக்கு அவருக்கு போட்டி ஊதியத்தில் 25 சதவீத அபராதமும் குறைபாடு புள்ளியும் வழங்கப்பட்டது.

Related posts: