விளையாட மாட்டோம்  – வோர்னர் அதிரடி!

Thursday, May 18th, 2017

அவுஸ்திரேலிய அணியின் உப தலைவர் மற்றும் அதிரடி ஆட்டக்காரரான டேவிட் வோர்னர் சம்பளப்பணம் வழங்கப்படாவிட்டால் ஏஷஷ் தொடரில் விளையாடமாட்டோம் என அறிவித்துள்ளார். இது தொடர்பில் ஆஸி. கிரிக்கெட் சபைக்கு அவர் கடிதமொன்றையும் அனுப்பியுள்ளார்.

ஆஸி. கிரிக்கெட் சபை வீரர்களுக்கான சம்பளப்பணம் எதிர்வரும் ஜுன் 30 ஆம் திகதிக்கு பிறகு வழங்கப்படாது என அறிவித்துள்ளது.காரணம் ஆஸி. கிரிக்கெட் சபை வீரர்களுக்கு மாதந்த சம்பளப்பணத்தை உயர்த்துவதா? அல்லது இலாபத்தில் பங்கு தருவதா? என்ற தீர்மானத்தைில் குழம்பிப்போய் உள்ளது.

எனினும் இது தொடர்பில் கடிதம் கருத்து தெரிவித்துள்ள வோர்னர், சம்பளப்பணம் தராவிட்டால் ஏஷஷ் தொடரை புறக்கணிப்போம் எனவும், ஆஸி. கிரிக்கெட் சபைக்கு அணி இல்லாமல் போய்விடும் எனவும் எச்சரித்துள்ளார். மிகவும் பிரபலமான ஏஷஷ் தொடர் எதிர்வரும் நவம்பர் மாதம்  நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: