மே.இ.தீவு – பாகிஸ்தான் ரி-ருவென்ரி தொடரில் கூடுதல் போட்டிகள் இணைப்பு!

Monday, March 6th, 2017

மேற்கிந்திய தீவுகள் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ரி-ருவென்ரி தொடரில் மேலதிகமாக இரு போட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு போட்டிகளை கொண்டதாக திட்டமிடப்பட்டிருந்த ரி-20 தொடரில் மேலும் இரு போட்டிகள் சேர்க்கப்பட்ட நிலையில், நான்கு போட்டிகளை கொண்ட தொடராக இது அமையவுள்ளது.

அதன்படி மார்ச் 31ஆம் திகதி ஆரம்பிக்க திட்டமிடப்பட்டிருந்த தொடர், 26ஆம் திகதியே ஆரம்பிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. முதல் போட்டி 26ஆம் திகதியும், 2ஆவது போட்டி 30-ஆம் திகதியும், 3ஆவது போட்டி 31ஆம் திகதியும், 4ஆவதும் இறுதியுமான போட்டி ஏப்ரல் முதலாம் திகதியும் நடைபெறவுள்ளது.

மேற்கிந்திய தீவிற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள பாகிஸ்தான், ரி-ருவென்ரி, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது

Related posts: