வக்கார் யூனிஸ் சதிவீரர் – வாசிம் அக்ரம் குற்றச்சாட்டு!
Friday, February 10th, 2017அனில் கும்ளேவின் 10 விக்கெட் வரலாற்று சாதனையை தடுக்க பாகிஸ்தானின் வக்கார் யூனிஸ் சதி செய்ததாக சக வீரர் வாசிம் அக்ரம் குற்றம்சாட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 1999ஆம் ஆண்டு பெப்ரவரி 7ஆம் தேதி டெல்லியில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் சுழல்பந்து வீச்சாளரும், தற்போதைய பயிற்சியாளருமான அனில் கும்ளே ஒரே இன்னிங்சில் 10 விக்கெட் வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்தார்.
இப்போட்டியின் கடைசி விக்கெட்டுக்கு வக்கார் யூனிஸ் களமிறங்கினார். அப்போது அவர் கும்ளேவுக்கு 10 விக்கெட் கிடைக்காமல் இருக்க, ரன் அவுட் முறையில் ஆட்டமிழக்க சதி செய்ததாக பாகிஸ்தான் அணியின் அப்போதைய கேப்டன் வாசிம் அக்ரம் கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
‘கடைசி விக்கெட்டுக்கு நாங்கள் ஜோடி சேர்ந்திருந்த போது என்னிடம் வந்த வக்கார், ‘ரன் அவுட் எப்படி ஆகலாம்?’ என யோசனை கேட்டார். அதற்கு நான், ‘கும்ளே 10 விக்கெட் வீழ்த்த வேண்டுமென விதிக்கப்பட்டிருந்தால், அதை உங்களால் தடுக்க முடியாது. என்னுடைய விக்கெட்டை கும்ளேவிடம் இழக்க மாட்டேன்’ என கூறி மறுத்துவிட்டேன். ஆனால் துரதிஷ்டவசமாக நானே கும்ளேவின் 10வது விக்கெட்டாக வீழ்ந்தேன்’ என கூறி உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், வக்கார் தனது ட்விட்டரில், ‘இதுபோன்ற சம்பவம் நடக்கவே இல்லை. அக்ரமுக்கு முதிர்வு நோய் தொற்றியிருக்கும் என நினைக்கிறேன்’ என கிண்டல் செய்துள்ளார்.
Related posts:
|
|