லசித் மாலிங்க மருத்துவமனையில்…!
Saturday, December 10th, 2016
சுகயீனம் காரணமாக இலங்கை அணியின் மிக சிறந்த வேக பந்து வீச்சாளர் லசித் மாலிங்க மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
டெங்கு தொற்று காரணமாகவே மலிங்க மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.எவ்வாறாயினும் மாலிங்க தற்போது சிகிச்சை பெற்றுள்ள நிலையில் வீடு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை எதிர் வரும் தென் ஆப்பிரிக்க அணியுடன் இடம்பெறவுள்ள சுற்றுப் பயணத்தின் போது லசித் மலிங்க விளையாடுவது தொடர்பில் இது வரையில் தகவல்கள் வெளியிடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts:
இன்று இந்திய - இலங்கை முதலாவது ஒருநாள் போட்டி ஆரம்பம்!
முன் அறிவித்தல் ஏதும் இன்றி உதைபந்தாட்ட போட்டிக்குத் தடை: பெற்றோர் குற்றம் சாட்டு!
சிறுவர்களை போல செயற்படுகின்றனர் - இலங்கை வீரர்களை கடுமையாக விமர்சிக்கின்றார் தில்ஷன்!
|
|
|


