ரபேல் நடால் அதிர்ச்சி தோல்வி!
Sunday, September 20th, 2020
இத்தாலிய ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதிப்போட்டியில் பிரபல டென்னிஸ் வீரரான ரபேல் நடால் (Rafael Nadal) அதிர்ச்சி தோல்வியடைந்துள்ளார்.
ரோம் நகரில் நடைபெற்று பெறும் குறித்த தொடரில், 9 முறை சம்பியன் பட்டத்தை வென்ற ஸ்பெயினின் ரபேல் நடால், காலிறுதிப்போட்டியில் அர்ஜெண்டினாவின் (Argentina) டியேகோ ஸ்வார்ட்ஸ்மேனுடன் (Diego Schwartzman) மோதினார்.
அந்த வகையில் போட்டியின் ஆரம்பத்திலிருந்தே தடுமாறிய ரபேல் நடால், 2-க்கு 6, 5-க்கு 7 என்ற நேர் செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
Related posts:
அரிதான சாதனைக்கு சொந்தக்காரரான ரொனால்டோ!
பேட்மிண்டன் உலகத் தொடர் - கால்இறுதியில் சாய்னா, சிந்து, பிரனீத்!
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து மாலிங்க ஓய்வு!
|
|
|


