சாமுவேல்ஸ் பந்துவீச ஐசிசி அனுமதி!
Friday, February 17th, 2017மேற்கிந்தியத் தீவுகள் ஆல்ரவுண்டர் சாமுவேல்ஸ் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் பந்துவீச அனுமதியளித்துள்ளது ஐசிசி.
முன்னதாக அவர் விதிமுறைக்கு புறம்பாக பந்துவீசுவதாகக் கூறி தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த ஜனவரி 29-ஆம் தேதி சாமுவேல்ஸ் பந்துவீசும் முறை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. அதில் அவர் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து பந்துவீச அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
சாமுவேல்ஸ், கடைசியாக நவம்பர் 2016-ல் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடினார். பிறகு ஜிம்பாப்வே-வில் நடைபெற்ற முத்தரப்பு போட்டியில் அவர் நீக்கப்பட்டார். மார்ச்சில் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் நடைபெறவுள்ளது. அதில் சாமுவேல்ஸ் இடம்பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Related posts:
இந்தியா முதல் இன்னிங்ஸில் 566 ஓட்டங்கள்!
முதலாவது வெற்றியை பதிவு செய்தது பஞ்சாப்!
இலங்கை டெஸ்ட் அணியின் பிரபல வீரருக்கு உபாதை!
|
|