யாழ். வலயம் சம்பியனானது!

Wednesday, July 12th, 2017

வடமாகாணப் பாடசாலைகளுக்கு இடையிலான தடகளத் தொடரில் ஒட்டுமொத்தப் புள்ளிகளின் அடிப்படையில் யாழ்ப்பாணக் கல்வி வலயம் கிண்ணம் வென்றது.

வடமாகாணப் பாடசாலைகளுக்கு இடையிலான 10ஆவது தடகளத் தொடர் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் கடந்த வியாழக்கிழமை ஆரம்பித்து நேற்று வரை நடைபெற்றது.

ஒட்டுமொத்தப் புள்ளிகளின் அடிப்படையில் 650 புள்ளிகளைப் பெற்று யாழ்ப்பாணக் கல்வி வலயம் கிண்ணம் வென்றது. மன்னார் கல்வி வலயம் 601 புள்ளிகளைப் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது. வலிகாமம் கல்வி வலயம் 545 புள்ளிகளைப் பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளது.

இந்த மூன்று வலயங்களுமே 500 இற்கும் மேல் புள்ளிகளைப் பெற்ற வலயங்களாகும். வடமராட்சி கல்வி வலயம் 346 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும் வவுனியா தெற்கு கல்வி வலயம் 228 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளன. கிளிநொச்சி கல்வி வலயம் 190 புள்ளிகளுடன் 6ஆவது இடத்திலும், முல்லைத்தீவு கல்வி வலயம் 188 புள்ளிகளுடன் ஏழாவது இடத்திலும், தென்மராட்சி கல்வி வலயம் 157 புள்ளிகளுடன் எட்டாவது இடத்திலும், மடு கல்வி வலயம் 130 புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்திலும் துணுக்காய் கல்வி வலயம் 109 புள்ளிகளுடன் பத்தாவது இடத்திலும் உள்ளன. அடுத்த இரு இடங்களிலும் முறையே தீவகம், வவுனியா வடக்கு ஆகிய கல்வி வலயங்கள் உள்ளன.

Related posts: