மைதானத்தில் விழுந்து உயிரிழந்த வீரர் !

Tuesday, May 10th, 2016

கேமரூன் நாட்டைச் சேர்ந்த உதைப்பந்தாட்ட நடுகள வீரர் பெட்ரிக் எகெங்,  தனது அணிக்காக விளையாடிய போது மைதானத்திலேயே சுருண்டு விழுந்து, பின் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார்.

டினாமோ புக்காரெஸ்ட் அணியைச் சேர்ந்த 26 வயதுடைய உதைப்பந்தாட்ட வீரர்  பெட்ரிக் எகெங்  வீடொரல் கான்ஸ்டன்டா அணிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில்,  தனது அணி சார்பில் 62ஆவது நிமிடத்தில் மாற்று போட்டியாளராக களமிறங்கினார்.

போட்டி நடைபெற்று கொண்டிருந்த போது மைதானத்திலேயே அவர் சுருண்டு விழுந்துள்ளார்.

இதன்பின் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர்,  2 மணிநேரத்தில் உயிரிழந்துள்ளார்.  அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இது பற்றி புக்காரெஸ்ட் அணி தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“உதைப்பந்தாட்ட வீரர் பெட்ரிக் கிளாட் எகெங்கை இன்றிரவு (நேற்று) இழந்து விட்டோம். எங்கள் அணியில் உள்ள ஒவ்வொருவரின் சார்பிலும் அவரது குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்து கொள்கிறோம். அவரது ஆன்மா சாந்தியடைய கடவுள் அருள் புரியட்டும்” என தெரிவித்துள்ளது.

அவரது மறைவுக்கு எகெங்கின் முன்னாள் அணியான கார்டோபாவும் டுவிட்டரில், பெட்ரிக் எகெங்கின் மரணத்திற்கு எங்களது சோகத்தை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை என தெரிவித்துள்ளது.

Related posts: