மேற்கிந்திய தீவுகளை சொந்த மண்ணில் சாய்க்குமா இந்தியா?

Friday, June 23rd, 2017

இந்திய மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. டிரினிடாட்டில் நடைபெறவுள்ள இப்போட்டியில் இந்திய அணிக்கு விராட் கோஹ்லியும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு ஜேசன் ஹோல்டரும் தலைமை தாங்கவுள்ளனர்.

5 ஒரு நாள் போட்டி மற்றும் ஒரேயொரு ரி-ருவென்ரி போட்டியில் விளையாடுவதற்காக இந்திய அணி மேற்கிந்திய தீவுகள் சென்றுள்ளது.சம்பியன்ஸ் கிண்ண தொடரின் இறுதி போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தானிடம் தோல்வியடைந்த இந்திய அணி தற்போது காரசாரமான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. இதனால் இத்தொடரை முழுமையாக வென்று தன் மீதான அனைத்து கரைகளையும் போக்க இந்தியா கடுமையாக போராடும் என்பதில் சந்தேகமில்லை.

ஒரு நாள் போட்டியில் இரு அணிகளும் இதுவரை 116 போட்டியில் மோதியுள்ளன. இதில் இந்தியா 53 போட்டியிலும் மேற்கிந்திய தீவுகள் அணி 60 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. 2 போட்டி முடிவு இல்லை. ஒரு போட்டி சமநிலையில் முடிந்துள்ளது.

 

Related posts: