மூன்றாவது டெஸ்ட் போட்டி பதிலடி கொடுக்குமா இலங்கை!
Thursday, June 9th, 2016இங்கிலாந்து–இலங்கை அணிகள் மோதும் 3ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று லோர்ட்ஸ் மைதானத்தில் ஆரம்பமாகின்றது
இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.
3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி லீட்ஸில் நடைபெற்றது. இந்தப்போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 88 ஓட்டங்கள் வித்தியாசத்திலும், செஸ்டர்லீஸ்டீரிட்ரில் நடந்த 2ஆவது டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட்டுக்கள் வித்தியாசத்திலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிவிட்டது
3ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று லோர்ட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது. இதிலும் வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்ற இங்கிலாந்து முயற்சிக்கும்
அதேவேளை ஆறுதல் வெற்றியையாவது பெற்றுவிட வேண்டும் என்ற முனைப்பில் இலங்கை அணி களமிறங்குகின்றது
பொதுவாக இங்கிலாந்துக்கு டெஸ்ட் தொடர் விளையாட செல்லும் அணிகளுக்கு மிகப்பெரிய சிக்கல்கள் உண்டு. அங்குள்ள சூழ்நிலையில் மற்ற அணிகள் விளையாடுவது மிகக்கடினம். சில நேரங்களில் இங்கிலாந்திற்கு ஈடுகொடுக்க முடியாத பரிதாப நிலைமை கூட ஏற்படும். காரணம் அந்நாட்டின் காலநிலை மற்றும் மைதானங்களின் தன்மை. தற்போது இலங்கை அணிக்கு இதே நிலைமைதான் ஏற்பட்டுள்ளது
அதுதவிர முன்னணி வீரர்களின் காயம் காரணமாகவும் இலங்கை அணி பின்னடைவை சந்தித்துள்ளது. குறிப்பாக 2014ஆம் ஆண்டு இவ்விரு அணிகளுக்குமிடையில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை இலங்கை அணி வென்றது
இதில் அபாரமாக பந்து வீசி வெற்றிக்கு உதவிய இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் தம்மிக்க பிரசாத் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகினார்.
அவரைத் தொடர்ந்து தசுன் சானக்க விலகினார். இதனால் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சு சற்று பலவீனமடைந்தது. இந்தப் போட்டியில் புதுமுக வீரர் சமிந்த பண்டார இணைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Related posts:
|
|