ஒருநாள் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு தொடரும் சோகம்!
Friday, September 2nd, 2016
பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற 4 ஆவது ஒருநாள் சர்வதேச போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.
லீட்ஸ் விளையாட்டு அரங்கில் இடம்பெற்ற இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்டுகள் இழப்பிற்கு 247 ஓட்டங்களை பெற்று கொண்டது.இதன்போது ஆசார் அலி 80 ஓட்டங்களை பெற்று கொண்டார்.பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 48 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுகளை இழந்து 252 ஓட்டங்களை பெற்று வெற்றியை தனதாக்கியது. இதற்கமைய 5 போட்டிகள் கொண்ட இத் தொடரில் இங்கிலாந்து அணி 4 – 0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
Related posts:
பட்டையை கிளப்பியது இந்திய மகளிர் அணி!
உலக கிண்ணம் பிற்போடப்பட்டால் ஆஸி வீரர்கள் ஐ.பி.எல். தொடரில் பங்கேற்பர் - டேவிட் வோர்னர்!
ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்ற கடற்படை வீராங்கனைக்கு தர உயர்வு!
|
|