30 பாடசாலைகள் மத்தியில் மகளிர் கிரிக்கெட் போட்டி!

Friday, May 11th, 2018

நாட்டிலுள்ள 30 பாடசாலைகள் மத்தியில் மகளிர் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படவுள்ளன. இதற்கான அங்கீகாரத்தை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் வழங்கியுள்ளது.

பெண்கள் மத்தியில் கிரிக்கெட் விளையாட்டை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் இந்த முயற்சி முன்னெடுக்கப்படுகிறது என ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் மகளிர் பிரிவுக்குப் பொறுப்பான அப்சாரி திலகரத்ன தெரிவித்தார்.

நேற்று முன்தினம் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் பொறுப்பான அப்சாரி திலகரத்ன இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,

பெண்கள் பாடசாலைகள் மத்தியிலான மாபெரும் கிரிக்கெட் போட்டிகள் மகளிர் தேசிய அணி நோக்கி வீராங்கனைகள் கவர்ந்திழுக்கப்படுவதை ஊக்குவிக்கும் என்றார்.

Related posts: