முன்னாள் தலைவர் I.C.C யிடம் கோரிக்கை!

Wednesday, August 9th, 2017

இலங்கை கிரிக்கட் அணியின் நிர்வாகம் தொடர்பில் சர்வதேச கிரிக்கட் சபை அவதானம் செலுத்த வேண்டும் என இலங்கை அணியின் முன்னாள் தலைவரும், அமைச்சருமான அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

தனது பேஸ்புக் பதிவின் ஊடாக அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.அதில் மேலும் கருத்து தெரிவித்துள்ள அமைச்சர், தற்போது கிரிக்கட் நிர்வாகம் தகுதியற்றவர்களின் கையில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

கிரிக்கட் நிர்வாகம், விளையாட்டு தொடர்பில் தகுதியான நபர்களின் இருக்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இந்த நிலை தொடர்ந்தும் நீடித்தால் இலங்கை கிரிக்கட்டின் எதிர்காலம் பிரச்சினைக்குரிய விடயமாக மாறிவிடும் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.இதேவேளை, இந்நாட்டு கிரிக்கட் நிர்வாகம் அருவருப்பான நிலையில் உள்ளதால், தற்போது தான் கிரிக்கட் போட்டியை பார்ப்பதில் இருந்து விலகியிருப்பதாக இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அர்ஜூன ரணதுங்க தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: