மீண்டும் கிண்ணம் வென்று அசத்தினார் ஆன்டி முர்ரே!

Monday, July 11th, 2016

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் பிரிட்டனின் ஆன்டி முர்ரே, கனடாவின் மிலோஸ் ரயோனிச்சை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.

லண்டனில் நடக்கும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் நேற்று நடந்த ஆடவர் ஒற்றையர் இறுதிச்சுற்று போட்டியில் தரவரிசையில் 2வது இடத்தில் உள்ள பிரிட்டனின் ஆன்டி முர்ரே, 7வது இடத்தில் உள்ள கனடாவின் மிலோஸ் ரயோனிச்சை எதிர்கொண்டார்.

இதில் அபாரமாக ஆடிய ஆன்டி முர்ரே, மிலோஸ் ரயோனிச்சை 6-4, 7-6, 7-6 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி 2வது முறையாக விம்பிள்டன் பட்டத்தை வென்றார்.

இதற்கு முன் இவர் 2013ம் ஆண்டு கிண்ணம் வென்றிருந்தார். இது முர்ரே வெல்லும் 3வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் ஆகும்.

Related posts: