முரளி விஜய், புஜாரா சதம்: பதிலடி கொடுக்கிறது இந்தியா!

Friday, November 11th, 2016

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.இவ்விரு அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் ராஜ்கோட்டில் தொடங்கியது.

இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, ஜோ ரூட் (124), பென் ஸ்டோக்ஸ் (128), மொயீன் அலி (117) ஆகியோரின் அபார சதத்தால் முதல் இன்னிங்சில் 537 ஓட்டங்கள் சேர்த்தது.இதைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி பதிலடி கொடுக்கும் வண்ணம் விளையாடி வருகிறது.

நேற்றைய ஆட்டநேர முடிவில் இந்தியா விக்கெட் இழப்பின்றி 63 ஓட்டங்கள் எடுத்திருந்தது. தொடக்க வீரர்களான முரளி விஜய் 25 ஓட்டங்களுடனும், கம்பீர் 28 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்நிலையில் இன்று 3வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய கம்பீர் மேலும் 1 ஓட்டம் எடுத்து 29 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.இதன் பின்னர் முரளி விஜயுடன் ஜோடி சேர்ந்தார் புஜாரா. இவர்கள் நிதானமாக ஆடி சதம் அடித்தனர். புஜாரா 124 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

தேநீர் இடைவேளையின் போது இந்திய அணி 2 விக்கெட்டுக்கு 279 ஓட்டங்கள் எடுத்துள்ளது. முரளி விஜய் (112), கோஹ்லி (0) ஆட்டமிழக்காமல் உள்ளனர்

625.0.560.350.160.300.053.800.668.160.90

Related posts: