மீண்டும் களத்தில் பிரகாசித்த டோனி!

Wednesday, January 11th, 2017

இந்திய அணியின் அணித்தலைவர் பொறுப்பிலிருந்து டோனி விலகிய பின்னர் அவர் தலைமையில் இந்திய ஏ அணி இன்று களம் கண்டது.

மும்பை பிரபோர்ன் மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் நாணயசுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி, இந்தியா ஏ அணியை முதலில் துடுப்பெடுத்தாட பணித்தது. இதையடுத்து இந்தியா ஏ அணியின் இன்னிங்ஸை ஷிகர் தவான் மற்றும் மன்தீப்சிங் ஆகியோர் தொடங்கினர்.

முதல் விக்கெட்டுக்கு 25 ஓட்டங்கள் சேர்த்த நிலையில் மன்தீப் 8 ஓட்டங்களில் வெளியேறினார். இதையடுத்து தவானுடன் ஜோடி சேர்ந்த அம்பாதி ராயுடு சீரான ஓட்டங்கள் குவித்தார்.

தவான் 63 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, சதமடித்த ராயுடு ரிட்டையர்டு ஹர்ட்டாக வெளியேறினார். நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்திய ஒருநாள் அணியில் இடம் பிடித்த யுவராஜ் சிங், 56 ஓட்டங்கள் குவித்து தனது தேர்வை நியாபப்படுத்தினார்.

இதையடுத்து ரசிகர்களின் கரகோஷங்களுக்கு மத்தியில் களமிறங்கிய டோனி, தனது ஆரம்பகால துடுப்பாட்டத்தை நினைவுபடுத்தும் வகையில் விளையாடினார். போட்டியின் 42ஆவது ஓவரில் களமிறங்கிய டோனி 40 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் உதவியுடன் 68 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் இந்தியா ஏ அணி 5 விக்கெட் இழப்புக்கு 304 ஓட்டங்கள் குவித்தது.

இங்கிலாந்து அணி தரப்பில் டேவிட் வில்லி மற்றும் ஜேக் பால் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

625.0.560.350.160.300.053.800.668.160.90 (1)

Related posts: