மாகாண மட்ட கூடைப்பந்து சுற்றில் யாழ்.இந்துக்கல்லூரில் சம்பியன்!

Friday, June 1st, 2018

வட மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான கூடைப்பந்தாட்டத்தொடர் யாழ்ப்பாணம் பழைய பழைய பூங்கா கூடைப்பந்தாட்டத் திடலில் நடைபெற்று வருகின்றது.இன்று நடைபெற்ற 17 வயதின் கீழ் பிரிவு இறுதி ஆட்டத்திலும், நேற்று நடைபெற்ற 20 வயதின் கீழ் பிரிவு இறுதியாட்டத்திலும்யாழ் இந்துக் கல்லூரி அணிகள் வெற்றி பெற்று சம்பியனாக வரலாறு படைத்துள்ளன.நேற்று நடைபெற்ற 20 வயதுப் பிரிவுக்கான இறுதி ஆட்டத்தில் கொக்குவில் இந்துக் கல்லூரியை எதிர்த்தாடிய இந்துக் கல்லூரி அணி 55:53 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில்வெற்றி பெற்றதோடு ஐந்து வருடங்களின் பின்னர் மாகாண மட்ட சாம்பியனாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இன்று நடைபெற்ற 17 வயதுப் பிரிவுக்கான இறுதி ஆட்டத்தில் யாழ் இந்துக் கல்லூரி அணி, யாழ் மத்திய கல்லூரியை எதிர்த்தாடி வெற்றி பெற்று சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.2013ஆம் வருடத்திற்கு பின்னர் 17 மற்றும் 20 வயதின் கீழ் பட்ட கூடைப்பந்தாட்ட அணி மாகாணமட்ட சம்பியன்களாக வெற்றி வாகை சூடியுள்ளது. இந்த வரலாற்று சாதனையை பதிவு செய்த வீரர்களை வாழ்த்துவதுடன் வெற்றியில்பெரும் பங்காற்றிய கல்லூரி அதிபர் திரு.சதா நிமலன் மற்றும் பழைய மாணவனும் பயிற்றுனருமாகிய திரு.கோசிகன் ஆகியோரைக்கும் சிறப்பான கௌரவம் கிடைத்துள்ளது.

Related posts: