மத்தியூஸ் குறித்து கிரிக்கெட் தேர்வுக் குழு தலைவர் விசேட கருத்து!

Thursday, April 12th, 2018

இலங்கை அணியின் ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 போட்டிகளின் தலைவராக நியமிக்கப்பட்ட அஞ்சலோ மத்தியூஸ் இனி பந்து வீசமாட்டார் என இலங்கை கிரிக்கெட் சபையின் தேர்வுக் குழுதலைவர் கிரஹாம் லெப்ரோய் தெரிவித்துள்ளார்.

இவர் தொடர்ந்தும் தசைப்பிடிப்பு உபாதைக்கு முகங்கொடுத்து வருகின்ற நிலையில் முக்கிய போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு தவறவிடப்படுகிறது.

இதனால் அவர் இனிவரும் போட்டிகளில் பந்துவீச மாட்டார் எனவும், முழு நேர துடுப்பாட்ட வீரராக செயற்படுவார் எனவும் கிரிக்கெட் சபை மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

Related posts: