மகளிர் கிரிக்கட் அணியை நினைத்து பெருமைப்படுகிறேன்: இந்தியப் பிரதமர் மோடி
Wednesday, July 26th, 2017
இந்திய மகளிர் கிரிக்கட் அணியை நினைத்து பெருமைப்படுவதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, ‘ எமது மகளிர் அணி வீராங்கனைகள் சிறந்தவர்களாக உள்ளனர். உலகக்கிண்ண கிரிக்கட் தொடர் மூலம் தமது திறனையும் திறமையையும் வெளிப்படுத்தியுள்ளனர். அவர்களை நினைத்து பெருமைப்படுகின்றேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
மகளிர் உலகக்கிண்ண கிரிக்கட் தொடரின் இறுதிப்போட்டிவரை நுழைந்த இந்திய அணி இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொண்டது.
இப்போட்டியில், இங்கிலாந்து அணியே கிண்ணத்தை வென்றது எனினும் இந்திய அணி போராடியே தோல்வியடைந்தது. வெறும் 9 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
விம்பிள்டன் தொடர்: முருகுஸா தோல்வி!
இலங்கை - சிம்பாப்வே - மே.தீவுகள் முக்கோண கிரிக்கெட் தொடர்!
இந்தியா தொடர்பான அவதூறு: வருத்தம் தெரிவித்த வீரர்!
|
|