பொதுநலவாய விளையாட்டுப்போட்டிகள் தொடர்பில் உத்தியோகபூர்வ அறிவிப்பு!

Friday, December 22nd, 2017

வரும் 2022ஆம் ஆண்டுக்கான பொதுநலவாய விளையாட்டுப்போட்டிகள் இங்கிலாந்தின் பேர்மிங்ஹேம் நகரில் நடைபெறவுள்ளது. இதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு பொதுநலவாய போட்டிகள் சம்மேளனத்தினால் இன்று அறிவிக்கப்படவுள்ளது.

இந்த போட்டியை நடத்துவதற்கு விருப்பமான நகரங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் காலம் கடந்த செப்டம்பர் மாதம் 30ம் திகதியுடன் நிறைவடைந்தது.இந்தக் காலப்பகுதியில் பேர்மிங்ஹேம் மாத்திரமே விண்ணப்பித்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுநலவாய போட்டிகளை நடத்துவதற்காக சுமார் 750 மில்லியன் யூரோ தேவை என மதிப்பிடப்பட்டுள்ளது.அதில், 560 மில்லியன் யூரோக்களை வழங்க இங்கிலாந்து அரசாங்கம் இணங்கியுள்ள நிலையில், 180 மில்லியன் யூரோவை வழங்கும் பொறுப்பை உள்ளுர் மன்றங்கள் ஏற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: