பிரபல இந்திய வீரர் மீது அவரது மனைவி முறைப்பாடு!

Friday, March 9th, 2018

இந்திய கிரிக்கட் வீரர் மொஹமட் சமிக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாகவும், அது குறித்து தட்டிக்கேட்டால் அடித்து துன்புறுத்துவதாகவும் அவரது மனைவி முறைப்பாடு தெரிவித்துள்ளார்.

மொஹமட் சமிக்கும், ஹாசின் ஜஹானுக்கும் கடந்த 2014ஆம் ஆண்டு ஜூன் மாதம் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில், தமது பேஸ்புக் பக்கத்தில் பல பெண்களின் புகைப்படங்களைப் பதிவிட்ட ஹாசின் ஜஹான், அந்த புகைப்படங்களில் உள்ள பெண்களுடன் தமது கணவருக்கு தகாத உறவு இருப்பதாக கூறியுள்ளார். அவற்றுடன் மொஹமட் சமி பல பெண்களுடன் சேட்டிங் செய்த விவரங்களையும் புகைப்படம் எடுத்து ஹாசன் ஜஹான் பதிவிட்டுள்ளார்.

தமது கணவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதை, தாம் பரிசாக வழங்கிய அவரது செல்போன் வாயிலாக அறிந்து கொண்டதாகவும், இதுதொடர்பாக அவரிடம் கேட்ட போது தம்மை அடித்து துன்புறுத்தியதாகவும் ஜஹான் குற்றம்சாட்டியுள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகள் மொஹமட் சமியின் குடும்பத்தினரால் கடுமையான சித்ரவதைகளை அனுபவித்ததாகவும், குடும்பமே சேர்ந்து தம்மை கொலை செய்ய முயற்சித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

விரைவில் ஷமி மீது காவல்துறையில் முறைப்பாடு செய்யவும் ஜஹான் முடிவு செய்துள்ளார். மனைவி இவ்வாறு கூறியுள்ள நிலையில் இதுகுறித்து தற்போது வரை மொஹமட் சமி எந்த விளக்கமும் தெரிவிக்கவில்லை.

இதுகுறித்து டுவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ள மொஹமட் சமி தமது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து கூறப்படும் அனைத்து தகவல்களும் பொய் என்று கூறியுள்ளார். தம்மையும், தமது கிரிக்கட் வாழ்க்கையையும் சீர்குலைப்பதற்கான சதி என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.

Related posts: