பளுதூக்கல்: தங்கத்தை வென்றார் ஆசிகா!
Friday, May 25th, 2018வடமாகாண கல்வித் திணைக்களத்தினால் வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான நடைபெற்ற பளுதூக்கலில் சுண்டுக்குழி மகளிர் கல்லூரி மாணவி வி.ஆசிகா தனது சாதனையை சமப்படுத்தியதுடன் தங்கம் வென்றார்.
அண்மையில் இந்தப் போட்டிகள் குருநகர் சென். ஜேம்ஸ் வித்தியாலய உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றன.
20 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான 63 கிலோ எடைப் பிரிவில் சுண்டுக்குழி மகளிர் கல்லூரி மாணவி வி.ஆசிகா 170 கிலோ பளுவைத் தூக்கி தங்கப் பதக்கத்தை வென்றார். அத்துடன் வடமாகாண சிறந்த பளுதூக்கும் வீராங்கனையாகவும் தெரிவு செய்யப்பட்டார்.
Related posts:
ஆத்திரத்தில் இலங்கை ரசிகர்கள்!
வாய்ப்பை நழுவவிட்டது இந்தியா!
மீண்டும் அணிக்கு திரும்பும் தினேஷ் சண்டிமல்!
|
|