ஐ.சி.சியால் கிறிஸ்கெய்லின் கோரிக்கை நிராகரிப்பு!

Tuesday, June 11th, 2019

மேற்கிந்தியத்தீவுகள் அணியின் அதிரடி வீரர் கிறிஸ் கெய்லின் கோரிக்கையை ஐ.சி.சி ஏற்க மறுத்துள்ளது.

உலகக்கோப்பை தொடரின் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில், இந்திய அணியின் விக்கெட் கீப்பர் டோனி, பாலிதான் முத்திரை பதித்த கையுறைகளை அணிந்திருந்தது வரவேற்பையும், விவாதங்களையும் கிளப்பியது.

அதனைத் தொடர்ந்து, டோனி தன் கையுறையில் இருக்கும் முத்திரையை நீக்க வேண்டும் என்று ஐ.சி.சி வலியுறுத்தியது. இதற்கு விளக்கம் அளித்த இந்திய கிரிக்கெட் வாரியம், டோனியிடம் அதனை நீக்குமாறு கேட்டுக்கொண்டது.

அதன்படி, நேற்று நடந்த அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில், பாலிதான் முத்திரை இல்லாத கையுறையை டோனி பயன்படுத்தினார். இந்நிலையில், மேற்கிந்தியத்தீவுகள் அணியின் அதிரடி வீரர் கிறிஸ், ஐ.சி.சி-யிடம் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.

அதாவது, ‘யுனிவர்சல் பாஸ்’ என்றலோ கோவை தனது பேட்டில் பயன்படுத்த கிறிஸ் கெய்ல் ஐ.சி.சி-யிடம் கோரிக்கை வைத்தார். ஆனால், ஐ.சி.சி இந்த கோரிக்கையை நிராகரித்து விட்டது. இது குறித்து ஐ.சி.சி அதிகாரி ஒருவர் கூறுகையில்,

‘வீரர்கள் அணியும் ஜெர்ஸி, பயன்படுத்தும் பொருட்களில் அரசியல், மதம் மற்றும் இன உணர்வுகள் இருக்கக்கூடாது என்று விதி இருக்கிறது. அதை கெய்லிடம் கூறினோம். ஏற்றுக் கொண்டார்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், இதற்குமுன் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக கருப்புபட்டை அணிந்து ஆடியதால், இங்கிலாந்து வீரர் மொயின் அலிக்கு தடை விதிக்கப்பட்டது. இப்போது கெய்லுக்கு அனுமதி அளித்தால், அவர் நாளைக்கே ‘ஃபிரி பாலஸ்தீனம்’ என்ற கருப்புபட்டை அணிய அனுமதி கேட்கலாம்.

ஐ.சி.சி தொடர்களில் ‘அன்பு’ என்ற வார்த்தையைக் கூட வீரர்கள் தங்கள் உடையிலோ, பேட்டிலோ பயன்படுத்தக்கூடாது. அதேநேரம், விழிப்புணர்வுக்காக நடத்தப்படும் இருதரப்பு தொடர்களில் பயன்படுத்திக் கொள்ள விதி இருக்கிறது என தெரிவித்துள்ளார்.

Related posts: