பலரின் கணிப்பை பொய்யாக்கி உள்ளே நுழைந்த பிரேசில்!

Tuesday, July 3rd, 2018

உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டியில் மெக்சிகோ அணிக்கு எதிரான போட்டியில் மெக்சிகோ 2-0 என்ற கணக்கில் வென்று காலிறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டி தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது என்றே கூறலாம்.

அதுமட்டுமின்றி முன்னாள் சாம்பியன் அணிகள் இந்த கால்பந்தாட்ட தொடரில் அடுத்தடுத்து வெளியேறியதால், அனைவரின் கவனமும் பிரேசில் பக்கம் திரும்பியது.

அர்ஜெண்டினா, போர்ச்சுக்கல், ஜேர்மனி, ஸ்பெயின் போன்ற அணிகள் அடிவாங்கி வெளியேறிவிட்டதால், பிரேசில் அணியும் வெளியேறுவதற்கு வாய்ப்பு உள்ளது என்று கணிக்கப்பட்டதால், இந்த போட்டி கால்பந்தாட்ட ரசிகர்களின் அனைவரின் கவனத்தையும் பெற்றது.

இந்த போட்டியில் காயத்திலிருந்து மீண்டு வந்த பிரேசில் அணி வீரர் நெய்மர் எப்படி விளையாடப் போகிறார் என்ற எதிர்பார்ப்பும் நிலவியது.

ஆனால் அந்த எதிர்பார்ப்பை சிறிதும் நோகடிக்காமல் நெய்மர் அற்புதமாக விளையாடினார்.

ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணி வீரர்களும் அனல் பறக்கும் ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியவில்லை.

இதையடுத்து இரண்டாம் பாதியின் 51-வது நிமிடத்தில் நட்சத்திர வீரர் நெய்மர் அசத்தலாக கோல் அடித்தார். அதன் பின் 90-வது நிமிடத்தில் பிரேசில் அணியின் பிர்மிடோ மற்றொரு கோல் அடிக்க ஆட்ட நேர முடிவில் பிரேசில் அணி 2-0 என்ற கணக்கில் வென்று காலிறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

பிரேசில் அணியும் வெளியேறும் என பலர் கணித்த நிலையில், அவர்களின் கணிப்பை பிரேசில் அணி பொய்யாகியுள்ளது.

காலிறுதிக்கு பிரேசில் அணி முன்னேறியுள்ளதால், அந்நாட்டு ரசிகர்கள் உச்சகட்ட மகிழ்ச்சியில் உள்ளதுடன், இந்த முறை நாங்கள் கிண்ணத்தை கைப்பற்றுவோம் என்று கூறி வருகின்றனர்.

Related posts: