சாமர சில்வாவின் தடை தற்காலிகநீக்கம்!

Monday, October 2nd, 2017

இலங்கை அணியின் பிரபல கிரிக்கட் வீரர் சாமர சில்வாவிற்கு விதிக்கப்பட்டுள்ள கிரிக்கட் தடை தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கட் சபை தெரிவித்துள்ளது.

உள்ளூர் போட்டி ஒன்றில் ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்டதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதுகுறித்த விசாரணை நிறைவடைய  மேலும் காலங்கள் தேவை என்பதன் காரணமாக விசாரணைகள் முடியும் வரை அவருக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: