பம்பலப்பிட்டி – யாழ். இந்துக்கல்லூரிகளின் கிரிக்கெட் சமர்!
Saturday, March 4th, 2017
கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரிக்கும் – யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கும் இடையில் வருடாந்தம் நடைபெறும் இந்துக்களுக்கிடையேயான சமர் என வர்ணிக்கப்படும் கிரிக்கெட் போட்டி நேற்று ஆரம்பமாகியது. இன்றும் இந்தப் போட்டி இடம்பெறவுள்ளது.
இப் போட்டி கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி மைதானத்தில் இடம்பெறுகின்றது. பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி கிரிக்கெட் அணியின் தலைவராக கணபதி தினேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். அதேவேளை, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணியின் தலைவராக கஜானந்த் செயற்படுகின்றார். இவ் வருடம் 2 ஆவது முறையாக நடைபெறுகின்றது.
நேற்று ஆரம்பமான இந்துக்களின் சமர் ஆட்டத்தில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ்.இந்து அணித்தலைவர் பம்பலபிட்டி இந்து அணியை முதலில் துடுப்பெடுத்தாட அழைத்தார். அந்த அணி 287 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. எஸ்.மதுசன்72, யதுர்ஷன் 63, ஹரிகரன் 43ஓட்டங்களையும் பெற்றனர். விதுஷன், சிவலெக்ஷன், அபிப்பிரியன் நிஷேக் ஆகியோர் தல 2 விக்கெட்டுக்களை வீழ்தினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய யாழ்.இந்துகல்லூரி அணி நேற்றைய ஆட்ட இறுதியின் போது 6 விக்கெட் இழப்பிற்கு 169 ஓட்டங்களைப் பெற்றது. கே.சந்தோஷ் 39, விதூசன் 52, துவாரகன் 51 ஓட்டங்களைப் பெற்றனர். கஜேந்திரன் 38 ஊட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினார். ஆட்டத்தின்.இறுதி நாள் இன்றாகும்.
Related posts:
|
|