பங்களாதேஸ் சுற்றுப்பயணத்தில் இலங்கையின் மற்றுமொரு வீரர் விலகல்!

Tuesday, December 26th, 2017

பங்களாதேஸிற்கான சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடவுள்ள, இலங்கை அணி, சிம்பாவே அணியுடனான முத்தரப்பு தொடரிலும் பங்கேற்கவுள்ளது. இலங்கை அணியின் உபாதை, தொடர் தோல்விகள் என்பது யாவரும் அறிந்த உண்மை ஒரு வீரர் மாற்றீடாக அணியில் இணைக்கபடும் போது குறித்த வீரருக்கான அதே தகுதி திறமையோடு இணைக்கப்படுகின்றார் என வினாவினால் ஒருபோதும் இல்லை என்பதே பதில் பிற அணிகளை காட்டிலும் இலங்கை அணி பின்னடைந்தே இருக்கின்றது.

இந்ந்நிலையில் அணியின் சிரேஸ்ட வீரர் மற்றும் முன்னாள் என்ற அடிப்படையில் அஞ்சலோ மத்தியூஸ் கடந்த இந்தியாவுக்கெதிரான டீ20 போட்டியின் இரண்டாவது போட்டியில் பந்துவீச்சின் போது ஏற்பட்ட தசைப்பிடிப்புக்காரணமாக மூன்றாவது போட்டியிலிருந்து விலகியதோடு, பங்களாதேஸ் தொடரில் பங்கேற்பது சந்தேகத்திற்கிடமானது. பெரும்பாலும் வாய்ப்புகள் அரிது.

இந்நிலையில் இந்திய டெஸ்ட் தொடரை இலங்கைக்கு சாதகமாக்கி சதமடித்து உபாதையால் இடைநடுவே மைதானத்தை விட்டு வெளியேறிய தஞ்சய டி சில்வா ஒருநாள் மற்றும் டீ20 தொடரிலிருந்து விலகிய நிலையில் பங்களாதேஸ் தொடரிலும் பங்கேற்பது தொடர்பாக சந்தேகம் நிலவுகின்றது. இவர் பங்களாதேஸ் தொடருக்கான அணியில் இடம்பறூவரா என்பதை இலங்கை கிரிக்கட் வாரியம் உறுத்திப்படுத்தவில்லை எனினும் தொடரின் இடைநடுவே தேர்ச்சி பெறுவார் என நம்பப்படுகின்றது.முக்கிய வீர்ரர்களின் உபாதை பேரிடராக இலங்கை அணிக்கு இருக்கும் என்பது திண்ணம்.

Related posts: