ஒற்றைச் பாதணியுடன் ஓடி தங்கம் வென்ற கௌதமி!

Tuesday, November 15th, 2016

தேசிய அளவிலான தடகளப்போட்டியில் தமிழகத்தை சேர்ந்த கவுதமி முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றார்.

கோவை நேரு விளையாட்டு அரங்கில் 32வது தேசிய அளவிலான தடகளப்போட்டி நடைபெற்றது. இதில் தமிழகத்தை சேர்ந்த கவுதமி, சமயஸ்ரீ மற்றும் வெளிமாநில வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

நேற்று நடந்த 800 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்ட கவுதமியின் ஒரு கால் ஷூ எதிர்பாராத விதமாக கழன்று விழுந்தது.இருப்பினும் அதை பொருட்படுத்தாமல் ஒரு கால் ஷூவுடன் ஓடிய கவுதமி முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றார். இவர் பந்தய தூரத்தை 2 நிமிடம் 18 வினாடிகளில் கடந்து சாதனை படைத்தார்.

இவருக்கு கடும் சவாலாக விளங்கிய சக வீராங்கனை சமயஸ்ரீ நூலிழையில் தங்கப்பதக்கம் பெறும் வாய்ப்பை தவறுவிட்டார். 2வது இடம்பிடித்த அவருக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.ஷூ கழற்றுவிழுந்தாலும் தளராமல் ஒரு கால் ஷூவுடன் ஓடி தங்கப்பதக்கம் வென்ற கவுதமியை அனைவரும் பாராட்டினர்.

625.0.560.350.160.300.053.800.668.160.90 (2)

Related posts: