மகளிர் ஆசிய கிண்ண இருபதுக்கு20 கிரிக்கெட் தொடர் – இறுதி போட்டிக்கு தெரிவானது இலங்கை அணி!

Friday, October 14th, 2022

2022 ஆம் ஆண்டுக்கான மகளிர் ஆசிய கிண்ண இருபதுக்கு20 கிரிக்கெட் தொடரின் இரண்டாம் அரையிறுதி போட்டியில் வெற்றி பெற்ற இலங்கை அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை மகளிர் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதற்கமைய, முதலில் துடுப்பாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுக்களை இழந்து 122 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. அணிசார்பில் அதிகபடியாக, ஹசிதா சமரவிக்ரம 35 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் பாகிஸ்தான் அணியின் நஸ்ரா சந்து 4 ஓவர்கள் பந்துவீசி 17 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

இந்நிலையில், 123 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுக்களை இழந்து 121 ஓட்டங்களை பெற்று தோல்வியை தழுவியது.

அணிசார்பில் அதிகபடியாக பிஸ்மா மாரூப் 42 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். பந்துவீச்சில் இலங்கை அணியின் இனோகா ரணவீர 04 ஓவர்கள் பந்துவீசி 17 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

இதற்கமைய, 2022 ஆம் ஆண்டுக்கான மகளிர் ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கு இலங்கை அணி தகுதி பெற்றுள்ளது.

முதலாவது அரையிறுதி போட்டியில் வெற்றி பெற்ற இந்திய மகளிர் அணியும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. இதன்படி, இறுதிப் போட்டியில் இந்தியா – இலங்கை அணிகள் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: