“நண்பர்களின் போர்” இன்று ஆரம்பமாகின்றது!

Friday, April 27th, 2018

ஸ்ரான்லிக் கல்லூரிக்கும் முல்லைத்தீவு வித்தியானந்தாக் கல்லூரிக்கும் இடையிலான நண்பர்களின் போர் என்று அழைக்கப்படும் துடுப்பாட்டத் தொடரில் இந்த வருடத்துக்கான ஆட்டம் இன்றும் நாளையும் நடைபெறவுள்ளது.

வித்தியானந்தாக் கல்லூரி மைதானத்தில் இந்த ஆட்டம் இடம்பெறவுள்ளது. 2013 ஆம் ஆண்டு இந்தத் தொடர் ஆரம்பிக்கப்பட்டது. இது வரை 5 ஆட்டங்களே நடைபெற்றுள்ளன. 2013 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஆட்டத்தில் ஸ்ரான்லிக் கல்லூரி அணி வெற்றிபெற்றது. 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆட்டத்தில் முல்லைத்தீவு வித்தியானந்தாக் கல்லூரி வெற்றிபெற்றது. 2015, 2016 ஆம் ஆண்டின் ஆட்டங்கள் சமநிலையில் முடிவடைந்தன. கடந்த வருட ஆட்டம் மழை காரணமாகக் கைவிடப்பட்டது. ஆக இதுவரையிலுமான பெறுபேறுகளின் அடிப்படையில் இரண்டு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் உள்ளன. இந்த வருடத்துக்கான ஆட்டத்தில் வெற்றிபெறும் அணி தொடரில் ஆதிக்கம் செலுத்தும் தகைமையைப் பெறும்.

Related posts: