தோல்வி குறித்து மனம் திறந்த சந்திமால்!
Saturday, January 20th, 2018
அணியின் திறமை தொடர்பில் எந்த விதத்திலும் திருப்தி அடைய முடியாது என அணித்தலைவர் தினேஸ் சந்திமால் தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியின் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை தெரிவித்தார். மேலும் இன்றைய போட்டியின் மூலம் எதிர்ப்பார்ப்புக்கள் உடைந்துள்ளதாக தினேஸ் சந்திமால் தெரிவித்தார்.
சமீப காலமாக இலங்கை அணி ஒருநாள் போட்டிகளில் மிகவும் மோசமான முறையில் விளையாடி வருவதாக சந்திமால் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை இன்றைய போட்டியில் சிறப்பாக விளையாடிய பங்களாதேஸ் அணி வீரர்களை பாராட்டுவதாக இலங்கை அணித்தலைவர் தினேஸ் சந்திமால் தெரிவித்திருந்தார்
Related posts:
அப்ரிடியுடன் கைகோர்க்கும் சங்கக்காரா!
ரோமனின் வரலாற்றை மாற்றியமைக்கவுள்ள சூரியக் கடிகாரம் !
வரலாற்றில் இடம்பிடித்த தினேஸ் சந்திமால்!
|
|