தொடரை கைப்பற்றியது இந்தியா!

Tuesday, January 21st, 2020

இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் தீர்மானமிக்க போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுக்களினால் வெற்றி பெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி அவுஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 286 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அவ்வணி சார்பாக ஸ்டீவ் ஸ்மித் 131 ஓட்டங்களையும், லபுஸ்சாக்னே 54 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

இந்நிலையில் 287 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 47.3 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

இந்திய அணி சார்பில் ரோஹித் சர்மா 119 மற்றும் விராட் கோலியின் 89 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

இதன் மூலமாக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 2க்கு 1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் ஆட்டநாயகனாக ரோஹித் சர்மா தெரிவானதோடு, தொடரின் நாயகனாக இந்திய அணித்தலைவர் விராட் கோலி தெரிவுசெய்யப்பட்டமை குறிப்பிடதக்கது

Related posts: