தேசியமட்ட சைக்கிளோட்டத்தில் சாதித்த வடக்கு வீராங்கனைகள்!

Monday, July 2nd, 2018

பாடசாலைகளுக்கு இடையிலான தேசியமட்ட சைக்கிளோட்டப் போட்டியில் பெண்கள் பிரிவில் முதல் 10 இடங்களுக்குள் வடமாகாண வீராங்கனைகள் நால்வர் இடம்பிடித்தனர்.

திருகோணமலையில் நேற்றுமுன்தினம் இந்தப் போட்டிகள் இடம்பெற்றன. இதில் யாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவி என்.விதுர்சனா நான்காம் இடத்தையும் பண்டத்தரிப்பு மகளிர் கல்லூரி மாணவி தமிழரசி ஐந்தாம் இடத்தையும் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை மாணவி நிதர்சனா ஆறாம் இடத்தையும் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவி சர்மினி பத்தாம் இடத்தையும் பெற்றனர்.

Related posts: