டோனி தான் முடிவு எடுக்க வேண்டும்!

Friday, May 20th, 2016

இந்திய கிரிக்கெட் அணி 9 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு எதிர்வரும் ஜுன் 11 ஆம் திகதி ஜிம்பாப்வே நாட்டிற்கு மூன்று ஒரு நாள் போட்டியிலும், மூன்று 20 ஒவர் போட்டியிலும் விளையாடவுள்ளது.

குறித்த சுற்றுப்பயணத்தில் டோனி பங்களிப்பது குறித்து அவரே முடிவு எடுக்க வேண்டும் என சந்தீப் படேல் தலைமையிலான தெரிவுக்குழு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டோனி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஒய்வு பெற்றுவிட்ட நிலையில், எதிர்வரும் 2017 ஆம் அண்டு மார்ச் மாதம் வரை அவருக்கு, சர்வதேச ஒரு நாள் போட்டியிலே, 20 ஒவர் போட்டியிலே பங்கேற்க்க வாய்ப்பு இல்லை.

எனவே தான் தெரிவுக்குழு, ஜிம்பாப்வே சொல்வது குறித்து டோனியே முடிவு எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்தில் இந்திய நட்சத்திர துடுப்பாட்டக்காரர் விராட் கோஹ்லி, ரோகித் சர்மா மற்றும் தவான் ஆகியோருக்கு ஒய்வு அளித்து, இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க தெரிவுக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related posts: