டோனியின் கிரிக்கெட் முடிவுக்கு வந்து விட்டதா?

Sunday, September 3rd, 2017

டோனி தனது கிரிக்கெட் வாழ்க்கையை பாதி கூட நிறைவு செய்யவில்லை என இந்திய அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

2019-ல் நடக்கவுள்ள உலக கிண்ண போட்டிக்கு இளம் வீரர்களை இந்தியா தயார் செய்து வரும் நிலையில், டோனி அதில் விளையாடுவாரா என கேள்வி எழுந்துள்ளது அந்தக் கேள்விகளை தூளாக்கும் விதமாக, அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில், டோனி குறித்து இந்திய அணி தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பேட்டியளித்துள்ளார். அவர் கூறுகையில், இந்திய அணியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வீரராக திகழும் டோனி வாழும் ஒரு ஜாம்பவான் ஆவார்

கிரிக்கெட் விளையாட்டின் ஆபரணம் அவர். இப்படி புகழ்வதால் அவரின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டதாக எண்ண வேண்டாம். டோனி தனது கிரிக்கெட் வாழ்க்கையை பாதி கூட நிறைவு செய்யவில்லை. அவர் சாதிக்க இன்னும் நிறைய இருக்கிறது என ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

Related posts: