டேனியல் விட்டோரி ஒரு வருடத்தில் மூன்று அணிகளுக்கு தலைமை பயிற்சியாளராக நியமிப்பு!

Sunday, March 4th, 2018

பங்களாதேஸ் பிரிமியர் லீக் போட்டித் தொடரின் ராஜ்சய் கிங்ஸ் அணிக்கு  நியூசிலாந்து அணியின் முன்னாள் தலைவரான சகலதுறை வீரர் டேனியல் விட்டோரி தலைமை பயிற்சியாளராகநியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் 2018 – 2019 ஆண்டுக்கான போட்டித் தொடருக்காக தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இம்முறை இந்திய பிரிமியர் லீக்போட்டித் தொடரில் ரோயல் செலன்சர்ஸ் பெங்களூர் அணியின் தலைமை பயிற்சியாளராக டேனியில் விட்டோரி செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் அவுஸ்திரேலியா பிக்பேஸ் போட்டித் தொடரில் ப்ரஸ்டன் ஹீட் அணியின் தலைமை பயிற்சியாளராகவும் டேனியல் விட்டோரி செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: