சில வீரர்கள் இந்தியாவிற்காகவே விளையாடுகின்றனர் – தயாசிறி!

Friday, June 23rd, 2017

சில இலங்கை வீரர்கள் உடற்தகுதியை பெற்று இந்தியாவில் கிரிக்கட் போட்டிகளில் கலந்து கொள்வதாக விளையாட்டுத்துறை அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலார் மாநாட்டில் இலங்கை கிரிக்கட் அணி தொடர்பில் தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார் . சிக்கார் தவான் 100க்கு மேற்பட்ட ஓட்டங்களை குவித்த பின்னர் களைப்பின்றி களத்தடுப்பில் ஈடுபட்டார். இதற்கு காரணம் அவர்களது உடற்தகுதியாகும் என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார். இலங்கை வீரர்கள் உடற்தகுதிக்கு (Fitness) பின்னரே போட்டிகளில் இணைத்துக்கொள்ளப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார். இதேவேளை, எதிர்கால கிரிக்கட் போட்டிகளின் போது போட்டியில் கலந்துகொள்ளும் வீரர்கள் உடற்தகுதி பரிசோதனையில் தகுதிபெறுவது கட்டாயம் ஆகும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். கிரிக்கட் வீரர்களுக்கு இராணுவப்பயிற்சி வழங்கப்பட வேண்டும் என அண்மையில் விளையாட்டுத்துறை தயாசிறி ஜயசேகர தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: