சில்வா, கருணாரத்ன சிறப்பான ஆரம்பம்; ஸ்திரமான நிலையில் இலங்கை!
Saturday, June 11th, 2016
இங்கிலாந்திற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்துள்ள இலங்கை அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 162 ஓட்டங்களைப் பெற்று ஸ்திரமான நிலையில் ஆடிவருகிறது
லோர்ட்ஸ் மைதானத்தில் நேற்று முன்தினம் ஆரம்பமான இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் கடைசியுமான டெஸ்ட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 416 ஓட்டங்களைப் பெற்று சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.
இதில் அபாரமாக ஆடிய பெயார்ஸ்டோ இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்று 167 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். இங்கிலாந்து அணித் தலைவர் குக் 85 ஓட்டங்களையும், வோக்ஸ் 66 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பந்துவீச்சில் இலங்கை அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ரங்கன ஹேரத் 4 விக்கெட்டுக்களையும், லக்மால் 3 விக்கெட்டுக்களையும், பிரதீப் 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
தனது முதல் இன்னிங்ஸை துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய இலங்கை அணிக்கு கருணாரத்ன மற்றும் சில்வா ஆகியோர் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாகக் களமிறங்கினர். இந்த இணை சிறப்பாகத் துடுப்பெடுத்தாடி அணியின் ஓட்ட எண்ணிக்கையை ஸ்திரமான நிலைக்கு உயர்த்தினர். இதில் இலங்கை 108 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளையில் முதல் விக்கெட்டை இழந்தது. 50 ஓட்டங்கள் பெற்றிருந்த வேளையில் கருணாரத்ன பின்னின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அதைத் தொடர்ந்து சில்வா வுடன் ஜோடி சேர்ந்தார் மெண் டிஸ். இந்த ஜோடி நிதானமாகத் துடுப்பெடுத்தாடி ஓட்டங்களைச் சேர்த்தது. இதில் சில்வா 79 ஓட் டங்களையும், மெண்டிஸ்25 ஓட்டங்களையும் பெற்றிருக்க போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நேரம் முடிவுக்கு வந்தது. தற்போது இலங்கை அணி இங்கிலாந்தை விட 254 ஓட்டங்கள் பின்தங்கி யுள்ளமை குறிப்பி டத்தக்கது.
Related posts:
|
|